முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யோவேல் புத்தகம் விளக்கவுரை Holy Bible Tamil

 யோவேல் புத்தகம் விளக்கவுரை

யோவேல் புத்தகம்

புத்தகத்தை ஆக்கியோன்

யோவேல் என்ற பெயரின் அர்த்தம் “தேவனே கர்த்தர்”

யோவேலின் தகப்பன் பெத்துவேல் (அவனைக் குறித்து வேறு தகவல் இல்லை) என்பதை தவிர யோவேல் குறித்து வேறு தகவல் இல்லை.

அவன் யூதாவை சேர்ந்தவன்

எருசலேமைக் குறித்து பேசியிருப்பதால் அவன் எருசலேமை சேர்ந்தவனாயிருக்கலாம்.

யோவேலைக் குறித்து புதிய ஏற்பாட்டில் மாத்திரமே ஒரு முறை மேற்கோள் காட்டப்படுகிறது (அப் 2:16-21)

அதிகாரங்கள் 3

வசனங்கள் 73

வரலாற்றில் இந்தப் புத்தகத்தின் இடம்

மற்றைய தீர்க்கதரிசிகளைப்போல தான் எந்தக்காலத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன் என்பதை யோவேல் தெரியப்படுத்தவில்லை.

அவனது தீர்க்கதரிசன ஊழியம் எந்த ராஜாவின் காலத்தில் நடக்கிறது என்பதை தெரியப்படுத்தவில்லை.

அவ்வாறு அவன் தெரியப்படுத்தாததற்கு யூதாவில் ஒரே ஒரு ராணியாக இருந்து கிமு 835ல் ஆட்சிசெய்த அத்தாலியாளின் நாட்களில் அவன் ஊழியம் செய்ததுதான் காரணம் என்று வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது.

யோவாஸ் அவனது எழு வயதில் ராஜாவானபோது இருந்த அரசாங்கம் முதியோர்களாலும். ஆசாரியர்களாலும் நடத்தப்பட்டிருந்தது. யோவேல் அவர்களை விளித்து தீர்க்கதரிசனம் உரைத்ததை சுட்டிக்காட்டி இந்த வாதத்தை வலுவூட்டுகிறார்கள். (1:2,2:16, 1:9, 1:13, 2:17)

அத்தாலியாளின் மரணத்திற்கு பின்பு பேரனான சிறுவன் யோவாஸ் பதவிக்கு வந்தான்.

யோவாஸ் சிறுவனாயிருந்ததினால் அவன் பெரியவனாகும் வரையில் ஆசாரியனான யோய்தா ஆட்சியை கவனித்துக்கொண்டான்.

இந்த காலகட்டத்தில் யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்ததால் எந்த ராஜாவின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இவற்றை கருத்தில்கொண்டு பார்க்கும்போது சுமாராக கிமு 835ம் ஆண்டிலோ அல்லது அதற்கு மிகவும் அண்மித்த காலத்திலோ யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். இது தீர்க்கதரிகளில் இவரை முன்னோடியாக கருத இடமண்டாக்குகிறது. எலிசா இவரது சமகாலத்தவர்.

இந்தப் புத்தகத்தின் நோக்கம்

யூதாவின் குடிகளையும், எருசலேமின் குடிகளையும் தேசத்தின் பேரழிவின் காலத்தில் புலம்பலோடும், அழுகையோடும் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்று யோவேல் அழைக்கிறார்.

வெட்டுக்கிளிகள் திராட்சை செடிகளையும் (1:5,7,12) தானிய விளைச்சலையும் அழித்துப்போட்டன (1:10) இதனால் ஆலயத்தில் பலிசெலுத்தப்பட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உண்டானது (1:9,13,16)

இந்தப் புத்தகத்தின் மூன்று நோக்கங்கள்

  1. யூதாவின் மேலும் மற்ற தேசங்கள் மேலும் கர்த்தருடைய நாளில் வரவிருக்கும் கடுமையான தண்டனையைக் குறித்து எச்சரித்தல்.
  2. யூதாவை தனது பாவங்களைவிட்டு மனந்திரும்ப அழைப்பது.
  3. தேசத்தின் மேல் மறுசீரமைப்பின் காலம் வரும் எனபதை அறிவிப்பது.

இஸ்ரவேலின் பாவங்கள் இன்னதென்று குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனாலும் நடந்த சம்பவங்களின் விளைவுகள் பாவங்கள் இருந்தன என்பதை காண்பிக்கின்றன.

தேவன் ஒருநாளில் எல்லா தீமைகளையும் அகற்றி புதிய சிருஷ்டிப்பை உருவாக்குவார்.

ஆனால் இந்த அழிவின் மத்தியிலும் அவரை நம்பியிருக்கிறவர்களுக்கான முடிவில்லாத பாதுகாப்பை அவர் அருளுவார்.

உண்மையான மனந்திரும்புதல் 2:12-13

அ) உண்மையான மனந்திரும்புதல் என்பது தேவனிடத்திற்கு திரும்புதல், அதாவது நமது பாவங்களைவிட்டு திரும்புதல்.

ஆ) உண்மையான மனந்திரும்புதல் என்பது முழு இருதயத்தோடும் செய்யப்படுவது, அதாவது தேவனிடத்தில் நம்மை ஒப்பவிக்க நாம் செய்யவேண்டிய யாவற்றையும் செய்வது.

உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யூதர்கள் வஸ்திரத்தை கிழிப்பது வழக்கம். ஆனால் இருதயத்தை கிழிக்காமல் வஸ்திரத்தை கிழிக்க முடியும்.

இ) உண்மையான மனந்திரும்புதல் என்பது செய்கையுடனும் (உபவாசத்தோடு) உணர்வுடனும் (அழுகையோடும். புலம்பலோடும்) இருக்க வேண்டும். எல்லா மனந்திரும்புதலிலும் உபவாசமும், அழுகையும் இராவிட்டாலும், செய்கையும் உணர்வும் இல்லாதிருக்குமானால் அது உண்மையான மனந்திரும்புதலாக இருப்பதில்லை.

இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகள்

  1. கர்த்தருடைய நாளின் அனுபவம்

வரலாற்றில் (1:1-20)

  • செய்தியின் மூலம் 1:1
  • அழிவைக் குறித்து சிந்திக்க கட்டளை கொடுக்கப்பட்டள்ளது 1:2-4
  • அழிவின் பூரணம் 1:5-12
  • அழிவின் பின்னணியில் மனந்திரும்ப அழைப்பு 1:13-20
  1. கர்த்தருடைய நாளின் விளக்கம்

பாரம்பரியம் (2:1-17)

  • எக்காளத்தை ஊது 2:1
  • இராணுவ படையெடுப்பு 2;2-11
  • அறிவுரையும், மனந்திரும்புதலும் 2:12-17
  1. கர்த்தருடைய நாளின் விபரிப்பு

கடைசிக்காலம் (2:18-3:21)

  • அறிமுகம் 2:18-20
  • பொருளாதார மறுசீரமைப்பு 2:21-27
  • ஆவிக்குரிய மறுசீரமைப்பு 2:28-32
  • தேசிய மறுசீரமைப்பு 3:1-21
யோவேல்Holy Bible Tamil | +919444888727 | Jegan - +919444414229

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil Bible Picture - தமிழ் வேதாகமம் ( தமிழ் பைபிள் 66 ஆகமங்கள் )

Genesis in Tamil Bible - ஆதியாகமம் தமிழ் வேதாகமம் Tamil Bible Exodus - யாத்திராகமம் தமிழ் வேதாகமம் Levity in Tamil Bible - லேவியராகமம் வேதாகமம் Numbers in Tamil Bible - எண்ணாகமம் தமிழ் வேதாகமம் Ubagamam in Tamil Bible - உபாகமமம் தமிழ் வேதாகமம் Tamil Bible - Judges நியாயாதிபதிகள் தமிழ் வேதாகமம் Ruth in Tamil Bible - ரூத் தமிழ் வேதாகமம் ISamuel in Tamil Bible | 1 சாமுவல் தமிழ் வேதாகமம் 2 Samuel in Tamil Bible - 2 சாமுவேல் தமிழ் வேதாகமம் 1 Deuteronomy in Tamilbible - 1 நாளாகமம் தமிழ் வேதாகமம் Joshua in Tamil Bible -  தமிழ் வேதாகமம் 2 Deuteronomy in Tamil Bible - 2 நாளாகமம் தமிழ் வேதாகமம் 1 Kings in Tamil Bible - 1 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் 2 Kings in Tamil Bible - 2 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் Ezra in Tamil Bible - எஸ்றா தமிழ் வேதாகமம் Nehemiah in Tamil Bible - நெகேமியா தமிழ் வேதாகமம் Esther in Tamil Bible - எஸ்தர் தமிழ் வேதாகமம் ...

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் புத்தகம் குறித்த ஒரு பார்வை எரேமியா என்ற பெயருக்கு “கர்த்தர் வீசுகிறவர்” என்று அர்த்தம். பாருக்கு என்பவன் எரேமியாவுக்கு உதவியாக எழுத்தனாக இருந்து, எரேமியா சொல்லியற்றை எழுதி அதை தனது பாதுகாப்பில் வைத்திருந்து தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் செய்திகளையெல்லாம் தொகுத்தான்.(36:4,32,45:1) செப்பனியா, ஆபகூக், தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள். பெரிய தீர்க்கதரிசிகள் வரிசையில் எரேமியா இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் ஏசாயாவைக்காட்டிலும் பெரியது, எசேக்கியேலைக்காட்டிலும் பெரியது, 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் சேர்க்கையைக்காட்டிலும் பெரியது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் வரலாறு, சுயசரிதை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். அதிகாரங்கள் 53 வசனங்கள் 1364 ஆக்கியோன் எரேமியா மற்ற எந்த தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை பார்க்கிலும் இதிலே தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சொந்த வாழ்க்கை, அவனது ஊழியங்கள், அவனது செய்தியை கேட்டவர்களின் எதிர்வினைகள், அவனுக்கு நேர்ந்த சோதனைகள், அ...

Stick Maths - குச்சி கணக்கு | Jegan

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட அளவை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்! சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க! மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான். சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்! வான சாஸ்திரி, பூகோள சாஸ்திரி, தத்துவவாதி, கவிஞன், சரித்திர ஆசிரியர், கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்... அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா? நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க. ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இர...