முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியாயாதிபதிகள் விளக்கவுரை Holy Bible Tamil

 நியாயாதிபதிகள் விளக்கவுரை

நியாயாதிபதிகள்

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள் : நியாயாதிபதிகள் 1-4, 6-16

தலைப்பு

நியாயாதிபதிகள் என்ற தலைப்பு, யோசுவா மரணத்திற்குப் பின்பு தேவனால் (2:16) எழுப்பப்பட்ட இஸ்ரவேல் மக்களின் நடத்துனர்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய கிரேக்க மொழித்தலைப்பானது, “நீதிபதி கள்” என்று மாத்திரம் அர்த்தப்படுத்துவதாயிருக்கலாம். ஆனால் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒருக்காலும் எந்த ஒரு நீதி மன்றத்திலும் தலைமை வகித்திருந்ததில்லை. எபிரெய மொழியில் இந்தத் தலைப்பானது மிகவும் பொருள் விரிவானதாக உள்ளது, இது “நீதிபதிகள், ஆட்சியாளர்கள், விடுதலையாளர்கள்” என்று அர்த்தப்படுகிறது.

நியாயாதிபதிகளின் காலம் கொந்தளிப்பின் காலமாக இருந்தது. யோசுவாவின் மரணத்திற்குப் பின்பு, மைய அரசு எதுவும் இருக்கவில்லை; “அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்” (17:6; 18:1; 19:1; 21:25).

அந்த நாட்டின் குடிகளை முற்றிலுமாகத் துரத்திவிடும்படி தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியிருந்தார், ஆனால் அவர்கள் அதைச் செய்ய வில்லை (1:21-36). அவர்களிடையில் இருந்த புறதெய்வ ஜனங்களின் செல் வாக்கினால் இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டுப் புறம்பே திரும்பினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது, மற்ற மக்களினங்கள் வந்து இஸ்ரவேல் மக்களை அடக்கியாளத் தேவன் அனுமதித்தார். அவர்கள் (இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பியபோது, தேவன் ஒரு விடுதலையாளரை, “ஒரு நியாயாதி பதியை” அனுப்பினார் (2:16-19). சற்றுக்காலம் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தி ருப்பார்கள்; பின்பு அவர்கள் மீண்டும் விக்கிரகாராதனையில் வீழ்ந்து போவார்கள், பின்பு முன்கூறப்பட்ட செயல்கள் யாவும் திரும்பவும் நடைபெறும். மீண்டும் விழுந்துபோகுதல், தண்டனை பெறுதல், மனந்திரும்புதல் மற்றும் மீட்கப்படுதல் என்ற சுழற்சியானது திரும்பத் திரும்ப நடைபெற்றது.

நியாயாதிபதிகள் நாட்டை முழுவதும் ஆண்ட அரசர்களைப்போல் இருக்கவில்லை, மாறாக அவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காகத் தேவனால் எழுப்பப்பட்ட உள்ளூர் விடுதலையாளர்களாய் இருந்தனர். அனேகமாக அவர்களின் ஊழியமானது ஒன்றின்மீது இன்னொன்று கவிந்திருந்தது.

ஒருவர் நியாயாதிபதிகளின் புத்தகத்தை வாசிக்கும்போது, நாட்டில் வன்முறை மாத்திரமே இருந்தது என்ற கருத்து ஏற்படலாம்; ஆனால் ரூத் என்ற அமைதியும் இனிமையும் உடைய புத்தகமானது “நியாயாதிபதிகள் ஆண்ட நாட்களில்” நடைபெற்றதைக் குறிப்பதாக உள்ளது. கலகத்தின் மத்தியிலும் சாதாரண மக்கள் இன்னமும் தேவனுக்கு உண்மையுள்ள வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

தாவீது அரசரின் வம்சவழியை நிலைநாட்டுதல் (4:21, 22) மற்றும் நிறைவாக இயேசுவின் வம்சவழியை நிலைநாட்டுதல் (மத்தேயு 1:5, 6) என்பதே ரூத் புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்தப் புத்தகங்களை எழுதியது யார் என்று நாம் அறிவதில்லை; இஸ்ரவேல் மக்களின் கடைசி நிாயாதிபதியான சாமுவேல் இவற்றை எழுதியிருக்கலாம் என்பது நல்ல யூகமா யிருக்கும்.

நியாயாதிபதிகள் புத்தகத்தின் வரைகுறிப்பு பின்னணி: இஸ்ரவேல் மக்கள் (கானான் நாட்டின்) குடிகளை முற்றிலுமாகத் துரத்தியிருக்கவில்லை (1), இதனால் தேவன் அவர்கள்மீது பிரியமற்றுப் போனார். (2:1-5). கடும் தீமையான சுழற்சியொன்று தொடங்கிற்று (2:6-3:4).

  1. முதல் சுழற்சி.
  • A விசுவாச விலக்கம் (3:5-7),
  • மெசொப்பொத்தாமியர்களின்: அடக்குமுறைக்
  • விடுவிக்கப்படுதல்: ஒத்னியேல் (3:9-11).

II இரண்டாம் சுழற்சி.

  • விசுவாச விலக்கம் (3:12அ).
  • அம்மோனியர்கள் மற்றும் அமலேக்கியர்களுடன் சேர்ந்து மோவாபியர்களின்: அடக்குமுறைக் கொடுமை (3:12ஆ-14).
  • விடுவிக்கப்படுதல்: ஏகூத் (3:15-30).

III. மூன்றாம் சுழற்சி.

  • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் (3:31).
  • விடுவிப்பவர்: சம்கார் (3:31).
  1. நான்காம் சுழற்சி.
  • விசுவாச விலக்கம் (4:1).
  • அடக்குமுறைக் கொடுமை: கானானியர்கள் (4:2, 3),
  • விடுவிப்பவர்கள்: தெபொராள் மற்றும் பாராக் (4:4-5:31),
  1. ஐந்தாவது சுழற்சி.
  • A விசுவாச விலக்கம் (6:1அ).
  • அடக்குமுறைக் கொடுமை: அமலேக்கியர்களுடன் சேர்ந்து மீதியா

னியர்கள் (6:1ஆ-10).

  • விடுதலையாளர்: கிதியோன் (6:11-8:32).
  • மீண்டும் விசுவாச விலக்கம் (8:33-35). E. அபகரிப்பாளன்: அபிமெலேக்கு (9).
  • விடுதலையாளர்கள்: தோலா (10:1, 2) மற்றும் யாயீர் (10:3-5).

VI ஆறாம் சுழற்சி.

  • விசுவாச விலக்கம் (10:6).
  • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் மற்றும் அம்மோனி- யர்கள் (10:7-18).
  • விடுதலையாளர்கள்: யெப்தா (11:1-12:7), இப்சான் (12:8-10), ஏலோன் (12:11, 12), மற்றும் அப்தோன் (12:13-15).

VII ஏழாம் சுழற்சி.

  • விசுவாச விலக்கம் (13:1அ).
  • அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள்
  • விடுதலையாளர்: சிம்சோன் (13:2-16:31).

பிற்சேர்க்கை: ஒழுக்கச் சூழ்நிலை (17-21).

நியாயாதிபதிகள் புத்தகங்களில் இருந்து பாடங்கள்

மனிதன் தேவனுடைய வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தனது சொந்த வழியைப் பின்பற்றும்போது, குழப்பமே விளைகிறது. தேவன் தமது மக்களின் மத்தியில் பாவத்தை சகித்துக்கொண்டிருப்பதில்லை. நம்மைத் தட்டியெழுப்புவதற்காகத் தேவன் நம்மீது தண்டனையை அனுப்பலாம். நாம் மனந்திரும்பினால், தேவன் நம்மைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வார்.

நாம் நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். நாம் தவறினால், ஒரு தலைமுறையிலேயே சபையானது இழந்து போகப்படக்கூடும் (நியாயாபதிகள் 2:10-13ஐக் காணவும்).

நாம் உலகத்தில் மோசமான நிலையைக் கொண்டிருந்தாலும்,நகோமி, ரூத், மற்றும் போவாசு ஆகியோர் செய்ததைப் போன்று நாமும் நமது தேவனுக்கு உண்மை நிறைந்த வாழ்வை வாழ்ந்து அதன்மூலம் நமது கடமையை நிறைவேற்ற முடியும்.

தேவன் உலகத்திற்கு இயேசுவைக் கொண்டுவருதல் என்ற தமது திட்டத்தைத் தொடர்ந்தார் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது!


HOLY BIBLE TAMIL | +919444888727 | CHENNAI-48

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil Bible Picture - தமிழ் வேதாகமம் ( தமிழ் பைபிள் 66 ஆகமங்கள் )

Genesis in Tamil Bible - ஆதியாகமம் தமிழ் வேதாகமம் Tamil Bible Exodus - யாத்திராகமம் தமிழ் வேதாகமம் Levity in Tamil Bible - லேவியராகமம் வேதாகமம் Numbers in Tamil Bible - எண்ணாகமம் தமிழ் வேதாகமம் Ubagamam in Tamil Bible - உபாகமமம் தமிழ் வேதாகமம் Tamil Bible - Judges நியாயாதிபதிகள் தமிழ் வேதாகமம் Ruth in Tamil Bible - ரூத் தமிழ் வேதாகமம் ISamuel in Tamil Bible | 1 சாமுவல் தமிழ் வேதாகமம் 2 Samuel in Tamil Bible - 2 சாமுவேல் தமிழ் வேதாகமம் 1 Deuteronomy in Tamilbible - 1 நாளாகமம் தமிழ் வேதாகமம் Joshua in Tamil Bible -  தமிழ் வேதாகமம் 2 Deuteronomy in Tamil Bible - 2 நாளாகமம் தமிழ் வேதாகமம் 1 Kings in Tamil Bible - 1 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் 2 Kings in Tamil Bible - 2 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் Ezra in Tamil Bible - எஸ்றா தமிழ் வேதாகமம் Nehemiah in Tamil Bible - நெகேமியா தமிழ் வேதாகமம் Esther in Tamil Bible - எஸ்தர் தமிழ் வேதாகமம் ...

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் புத்தகம் குறித்த ஒரு பார்வை எரேமியா என்ற பெயருக்கு “கர்த்தர் வீசுகிறவர்” என்று அர்த்தம். பாருக்கு என்பவன் எரேமியாவுக்கு உதவியாக எழுத்தனாக இருந்து, எரேமியா சொல்லியற்றை எழுதி அதை தனது பாதுகாப்பில் வைத்திருந்து தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் செய்திகளையெல்லாம் தொகுத்தான்.(36:4,32,45:1) செப்பனியா, ஆபகூக், தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள். பெரிய தீர்க்கதரிசிகள் வரிசையில் எரேமியா இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் ஏசாயாவைக்காட்டிலும் பெரியது, எசேக்கியேலைக்காட்டிலும் பெரியது, 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் சேர்க்கையைக்காட்டிலும் பெரியது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் வரலாறு, சுயசரிதை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். அதிகாரங்கள் 53 வசனங்கள் 1364 ஆக்கியோன் எரேமியா மற்ற எந்த தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை பார்க்கிலும் இதிலே தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சொந்த வாழ்க்கை, அவனது ஊழியங்கள், அவனது செய்தியை கேட்டவர்களின் எதிர்வினைகள், அவனுக்கு நேர்ந்த சோதனைகள், அ...

Stick Maths - குச்சி கணக்கு | Jegan

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட அளவை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்! சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க! மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான். சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்! வான சாஸ்திரி, பூகோள சாஸ்திரி, தத்துவவாதி, கவிஞன், சரித்திர ஆசிரியர், கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்... அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா? நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க. ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இர...